குண்டுவெடிப்பு கைதி பரோலில் வந்து திருமணம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கைதி, 10 மணிநேர பரோலில் வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில்அடைக்கப்பட்டுள்ளவர் அப்துல் சலாம். 35 வயதாகும் இவரது வீடு மானியத்தோட்டத்தில் உள்ளது. சலாமுக்கும், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தபுஷ்ரா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதையடுத்து தன்னை 10 மணி நேர பரோலில் விடுவிக்க வேண்டும் என்று கோரிஅப்துல் சலாம் சார்பில் சிறை வளாகத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பரோலை அனுமதித்தது. இதேபோல சிறையில்அடைக்கப்பட்டுள்ள சலாமின் சகோதரர் அப்துல் ரகீம், நண்பர் தடா அஸ்லாம்ஆகியோரும் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பரோலில் வெளியே வந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அப்துல் சலாம்பரோலில் விடுவிக்கப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் அப்துல் சலாமை போலீஸார்அவரது வீட்டுக்கு காலையில் கொண்டு சென்றனர்.

பின்னர் திருமணம் நடந்தது. மணப்பெண் புஷ்ரா கோவை வரவில்லை.கேரளாவிலேயே இருந்தார். இருப்பினும் அவரது சம்மதம் ஏற்கனவே பெறப்பட்டுரிஜிஸ்டரில் அவர் கைழுெத்திட்டிருந்தார்.

பெண்ணின் உறவினர்கள் 15 பேர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்துல்சலாமும் கையெழுத்து போடவே திருமணம் முடிந்தது.

பின்னர் திருமண விருந்து பரிமாறப்பட்டது. திருமணத்திற்குப் பின் மாலையில்பரோலில் வெளிவந்த 3 பேரும் மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுஅடைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+