பண மோசடி வழக்கு: ஜெயலட்சுமி விடுதலை
கோவை:
கோவை பண மோசடி வழக்கிலிருந்து ஜெயலட்சுமி விடுதலை செய்யப்பட்டார்.
ஏட்டு முதல் எஸ்.பி. வரை ஏகப்பட்ட போலீஸாரை தனது சேலையில் முடிந்துகொண்டு தமிழகத்தையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியவர் சிவகாசி ஜெயலட்சுமி.
அவர் தொடர்பான பல்வேறு வழக்குகளையும் சிபிஐ விசாரணை நடத்தியது.விசாரணையின் இறுதியில் பல்வேறு நீதிமன்றங்களில் ஜெயலட்சுமி மீதே சிபிஐசார்பில் வழக்கு தொடரப்பட்டன.
![]() |
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதில், சிவகாசிஜெயலட்சுமி மீதான குற்றச்சாட்டு போதிய ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லைஎன்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்மூலம் இந்த வழக்கிலிருந்து ஜெயலட்சுமி விடுதலை ஆகியுள்ளார். ஏற்கனவேதிண்டுக்கல் டிஎஸ்பி மனைவி விசாலாட்சி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 7ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி சிறையில் சிறைவாசம் அனுபவித்துவருகிறார் ஜெயலட்சுமி என்பது நினைவிருக்கலாம்.













Click it and Unblock the Notifications