இன்று ஓய்வு பெறுகிறார் அலெக்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதா ஆட்சியில் டிஜிபியாக இருந்து தற்போதைய திமுக ஆட்சியில் காவலர்அகாடமியின் சிறப்பு அதிகாரியாக மாற்றப்பட்ட ஏ.எக்ஸ். அலெக்சாண்டர் இன்றுடன்ஓய்வு பெறுகிறார். இன்னொரு டிஜிபியான காளிமுத்துவும் இன்றே ஓய்வு பெறுகிறார்.

உளவுப்புலி என்று அழைக்கப்பட்டவர் அலெக்சாண்டர். நீண்ட நெடுங்காலமாகஉளவுப் பிரிவிலேயே இருந்து வந்த அலெக்சாண்டர் கடந்த முறை அதிமுக ஆட்சிக்குவருவதற்கு முன்பு வரை கருணாநிதிக்கு நெருக்கமானவராகவே பார்க்கப்பட்டார்.

ஜெயலலிதா முதல்வரானவுடன் அலெக்சாண்டரை மண்டபம் அகதிகள் முகாமுக்குதூக்கி அடித்தார். அந்த அளவுக்கு அவர் அதிமுக ஆட்சியின் அன்பைப்பெற்றிருந்தார்.

ஆனால் போகப் போக ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்று மீண்டும்சென்னைக்குத் திரும்பினார் அலெக்சாண்டர். டிஜிபியாகவும் பொறுப்பேற்றார்.

இந் நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் அலெக்சாண்டர் போலீஸ் அகாடமியின்சிறப்பு அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டார். இன்றுடன் அவர் பணியிலிருந்துஓய்வு பெறுகிறார்.

இதேபோல கூடுதல் டிஜிபியாக இருந்து சமீபத்தில் பதவி உயர்வு பெற்று காவலர்வீட்டு வசதி வாரியத் தலைவராக பணியமர்த்தப்பட்ட காளிமுத்துவும் இன்று ஓய்வுபெறுகிறார்.

இரு அதிகாரிகளுக்கும் விடை கொடுக்கும் நிகழ்ச்சி ராஜரத்தினம் விளையாட்டுஅரங்கில் நடைபெறுகிறது. காலையில் காளிமுத்துவுக்கும், மாலையில்அலெக்சாண்டருக்கும் விடை கொடுக்கப்படுகிறது. இரு நிகழ்ச்சிகளிலும் டிஜிபிமுகர்ஜி கலந்து கொள்கிறார்.

இத்தனைக்கும் முகர்ஜி டிஜிபியாக பதவியேற்றபோது சம்பிரதாயமாக வந்திருக்கவேண்டிய அலெக்ஸாண்டர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+