கைது பயம்: முன் ஜாமீன் கேட்கும் பாண்டு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவல்துறை அதிகாரியை தாக்க முயன்றதாகவும் பணி செய்ய விடாமல்தடுத்ததாகவும் தொடரப்பட்ட வழக்கில் கைதாகும் வாய்ப்பு இருப்பதால்முன் ஜாமீன்கோரி முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் மனு தாக்கல் செய்துள்ளார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் 2 நாட்களுக்கு முன்புசட்டசபைக்கு வர முயன்றனர். ஆனால் அவர்களை தலைமைச் செயலக வாயிலேயேபோலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும்இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.இந்த மோதலின்போது சப் இன்ஸ்பெக்டர் வசந்தனுடன் பாண்டுரங்கன் கடுமையானவாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் வட சென்னை இணை ஆணையர் ரவியுடனும்அவர் கடுமையாக மோதினார். அவர்களைப் பிடித்து கீழே தள்ளினார்.
இதைத் தொடர்ந்து காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகபாண்டுரங்கன் மீது கோட்டை காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் வசந்தன் புகார்செய்தார்.
அந்த புகாரின் பேரில் பாண்டுரங்கன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஜார்ஜ் டவுன் 7வதுபெருநகர நீதிமன்றத்தில் பாண்டுரங்கன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications