சென்னையில் ரூ.150 கோடியில் கப்பல் பழுதுபார்க்கும் துறைமுகம்: பாலு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கப்பல்களை பழுதுபார்க்கும் வசதிகளைக் கொண்ட ஒரு புதிய துறைமுகம்சென்னையில் ரூ. 150 கோடியில் நிறுவப்படும் என்று மத்திய கப்பல் துறை அமைச்சர்டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பாலு பேசுகையில்,கப்பல்கள் பழுதடைந்தால் அவற்றை பழுதுபார்க்க வசதியாக சென்னையில் ரூ. 150கோடியில் புதிய துறைமுகம் அமைக்கப்படும்.
இந்தத் துறைமுகத்தில் கப்பல்களில் ஏற்படும் அனைத்து பழுதுகளையும் சரி செய்யஅதி நவீன வசதிகள் இடம் பெற்றிருக்கும்.
சேது சமுத்திரத் திட்டத்தின் கீழ் தற்போது பாக் ஜலசந்தியில் தூர் வாரப்பட்டு வருகிறது.இதுவரை 5.3 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவுக்கு தூர் வாரப்பட்டுள்ளது. தொடர்ந்துபணிகள் தொய்வின்றி நடந்து வருகின்றன என்றார் பாலு.
முன்னதாக சென்னை மற்றும் புறநகர்களில் நடந்து வரும் மேம்பாலங்கள் கட்டும்பணி, விரிவாக்கப் பணிகளை பாலு அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications