தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு-பாஜக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்து வருவதாக தமிழக பாஜகதலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக பாஜகவின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று தொடங்கியது.இதையொட்டி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,தமிழகத்தில் திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம்சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைவது வழக்கமான விஷயமாகி விட்டது.வன்முறையும், அராஜகம் அரங்கேறத் தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் திமுகவினரின் தாக்குதலுக்கு அதிமுக, மதிமுக கட்சிகளைச்சேர்ந்த பலர் உள்ளாகி வருகின்றனர்.
சென்னை அம்பத்தூரில் நகர அதிமுக செயலாளர் ரவி படுகொலைசெய்யப்பட்டுள்ளார். இது கடுமையாக கண்டிக்கத்தகக்து.
ரவியைக் கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்துபோலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications