திமுகவில் விஜயா தாயன்பன்!
சென்னை:
மதிமுக மகளிர் அணிச் செயலாளர் விஜயா தாயன்பன் இன்று திமுகவில் இணைந்தார்.
சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் மதிமுகவில் ஆங்காங்கே விரிசல் ஏற்படத்தொடங்கியுள்ளது. முதலில் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த மதிமுக பிரகரானபொடா நாகராஜன் கட்சியிலிருந்து விலகி தேமுதிகவில் இணைந்தார்.இவர் வைகோ பொடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது 19மாதம் சிறைவாசம் அனுபவித்தவர்.
இவரைத் தொடர்ந்து கவிஞர் முத்துலிங்கம் மதிமுகவிலிருந்து விலகினார்.
தேர்தல் நேரத்தின்போதுதான் முத்துலிங்கம் மதிமுகவில் இணைந்தார். அதேவேகத்தில் இப்போது விலகி விட்டார்.
இந்த நிலையில் மதிமுக மகளிர் அணிச் செயலாளர் விஜயா தாயன்பன்மதிமுகவிலிருந்து விலகி விட்டார். வைகோ திமுகவிலிருந்து வெளியேறிமதிமுகவைத் தொடங்கியபோது விஜயாவும் திமுகவிலிருந்து விலகி மதிமுகவில்இணைந்தார்.
மகளிர் அணிச் செயலாளராக இருந்து வந்த விஜயா தாயன்பன் சட்டசபைத் தேர்தலில்சீட் கேட்டிருந்தார். ஆனால் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நேற்று சென்னைகடற்கரையில் நடந்த கண்ணகி சிலை திறப்பின்போது விஜயா தாயன்பனும் கலந்துகொண்டு திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த விஜயா தாயன்பன்முதல்வர் கருணாநதியை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.