ஸ்டாலின் மீதான வழக்குகள் வாபஸ்
சென்னை:
உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 7 திமுகவினர் மீதானவழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது.
அதிமுக ஆட்சியில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மீது தொடரப்பட்ட அவதூறு,டெஸ்மா, எஸ்மா சட்டத்தின் கீழான வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளும்வாபஸ் பெறப்படும் என சட்டசபையில் முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.அதன்படி கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் மீதான டெஸ்மா சட்ட வழக்குகள்முதலில் வாபஸ் பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 7திமுகவினர் மீதான ராணி மேரிக் கல்லூரி இடிப்பு விவகாரம் தொடர்பான வழக்குகள்வாபஸ் பெறப்பட்டுள்ளன.
கடந்த 2003ம் ஆண்டு சென்னை ராணி மேரிக் கல்லூரியை இடிக்க தமிழக அரசுமுடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் பெரும் போராட்டம்நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கல்லூரி வளாகத்திற்குள்சென்று மாணவிகளிடம் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் பேசினர்.
இதையடுத்து ஸ்டாலின், பொன்முடி, தண்டாரம்பட்டு வேலு, ஜெ. அன்பழகன்,பரணிகுமார், புகழேந்தி உள்ளிட்ட 7 திமுகவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர்.
இந்த வழக்கு எழும்பூர் 13வது மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவந்தது. ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது குற்றச் செயலில் ஈடுபடுதல், அத்துமீறிநுழைதல், அரசுப் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகியபிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது. இந்த வழக்குகளை வாபஸ் பெறுவதாக அரசு வழக்கறிஞர் கந்தசாமிநீதிபதி ராமநாதன் முன்பு ஆஜராகி தெரிவித்து மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி ராமநாதன், வாபஸ் பெறும் முடிவை ஏற்றுக்கொண்டு வழக்குகளை பைசல் செய்தார்.












Click it and Unblock the Notifications