ரவுடிகளுக்கு சென்னை கமிஷனர் எச்சரிக்கை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகரில் ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் லத்திகா சரண் பேசுகையில், சென்னைமாநகரில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குற்றச் செயல்களில்ஈடுபடுவதை காவல்துறை அனுமதிக்காது.ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கைநிலைநாட்ட சென்னையில் உள்ள குற்றவாளிகள், சமூக விரோதிகள், ரவுடிகள்ஆகியோர் குறித்த பட்டியலை மாநகர காவல்துறை தயாரித்து வருகிறது. இதில் இடம்பெறும் அனைவரும் சட்டத்திற்குட்பட்டு பிடிக்கப்படுவர் என்றார் சரண்.












Click it and Unblock the Notifications