வைகோ, நெடுமாறன் மீதான வழக்குகளை வாபஸ் பெற கோரிக்கை
சென்னை:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர்வைகோ உள்ளிட்டோர் மீதான பொடா வழக்குகளை தமிழக அரசு உடனடியாகவாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் கூட்டம் அதன் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமையில் சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தில் சுப.வீரபாண்டியன்,பேராசிரியர் கல்யாணி, தமிழப்பன், மணியரசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:
மரண தண்டனை அறவே ஒழிக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
வைகோ, பழ. நெடுமாறன், நக்கீரன் கோபால், தர்மபுரித் தோழர்கள் ஆகியோர் மீதுபோடப்பட்டுள்ள பொடா வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.
தமிழர் தேசிய இயக்கம மீதான தடை உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும்.
நூற்றுக்கணக்கான ஸ்லீம் இளைஞர்கள், 5 முதல் 8 ஆண்டுகளாக சிறைகளில் வாடிவருகின்றனர். அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அந்தவழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
அந்தக் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
ஜூலை 1ம் தேதி சென்னையில் மக்கள் உரிமை மாநாட்டை நடத்தவும் கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications