பெட்ரோல் விலை உயர்வு: 13ம் தேதி ஆட்டோலாரி ஸ்டிரைக்-ஜெ தலைமையில் போராட்டம்
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும்13ம் தேதி ஆட்டோக்கள், லாரிகள் ஓடாது என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பல்வேறு தரப்பினரும்போராட்டம் நடத்தி வருகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிகளும், அதன்பல்வேறு தொழிற்சங்கப் பிரிவுகளும் வருகிற 13ம் தேதி நாடு தழுவியஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளன.இதையொட்டி, தமிழகத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தஆட்டோ மற்றும் டாக்சி ஒட்டுநர்கள் அன்றைய தினம் வேலைநிறுத்தம்செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதனால் தமிழகம் முழுவதும் 13ம் தேதி ஆட்டோக்கள், டாக்சிகள்ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல 13ம் தேதி காலை 6 மணி முதல் மறு நாள் காலை 6 மணிவரை தமிழகம் முழுவதும் லாரிகள் ஓடாது என்று தமிழ்நாடு லாரிஉரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செங்கோடன் அறிவித்துள்ளார்.
அகில இந்திய அளவில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
இதற்கிடையே இன்று ஆட்டோ ஓட்டுனர்கள் சென்னையில் சாலைமறியல் போராட்டத்தில் குதித்தனர். தங்கசாலை அருகேஆட்டோக்களை நிறுத்திவிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்குபோக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜெ. தலைமையில் ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வருகிற12ம் தேதி அதிமுக கூட்டணி நடத்தவுள்ள மாநிலம் தழுவியஆர்ப்பாட்டத்தில் சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்குஜெயலலிதா தலைமை தாங்குகிறார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கடுமையாக கண்டித்துள்ளஜெயலலிதா, வருகிற 12ம் தேதி மாவட்டந்தோறும், மத்திய அரசுஅலுவலகங்கள் முன்பு அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில்ஆர்ப்பாட்டம் டத்தப்படும் என அறிவித்திருந்தார்.
இந் நிலையில் யார் தலைமையில் போராட்டம் நடைபெறவுள்ளதுஎன்ற பட்டியலை அதிமுக தலைமைக் கழகம் தற்போதுவெளியிட்டுள்ளது.
சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே உள்ள மெமோரியல்ஹால் பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஜெயலலிதாதலைமை தாங்குகிறார்.
ஜெயலலிதாவுடன், வைகோ, தொல். திருமாவளவன், ஜி.காளன், பஷீர்அகமது, தாவூத் மியாகான், ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
மதுரையில் நடைபெறும் போராட்டத்தில் காளிமுத்துவும், தேனியில்ஓ.பன்னீர் செல்வம், கேரளாவில் நடைபெறும் போராட்டத்தில்திண்டுக்கல் சீனிவாசனும், நாமக்கல்லில் சுலோச்சனா சம்பத்தும்,மகாராஷ்டிராவில் ஓ.எஸ்.மணியனும், திருவள்ளூரில் விசாலாட்சிநெடுஞ்செழியனும் போராட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார்கள்.
ஈரோட்டில் கே.ஏ.செங்கோட்டையனும், கிருஷ்ணகிரியில்தம்பித்துரையும், காஞ்சிபுரத்தில் வளர்மதியும், பெங்களூரில்விஜயலட்சுமி பழனிச்சாமியும், புதுவையில் மதுசூதனனும்போராட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார்கள்.
விருதுநகரில் தினகரன், வேலூரில் கோகுல இந்திரா, கரூரில்எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் போராட்டத்திற்குத் தலைமைதாங்குகின்றனர்.