டாவின்சி கோட் தடை: படைப்பாளிகள் கண்டனம்
சென்னை:
தி டாவின்சி கோட் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதற்கு தமிழ்படைப்பாளிகள் முன்னணி அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ் படைப்பாளிகள் முன்னணி அமைப்பில் பல்வேறு எழுத்தாளர்கள், கவிஞர்கள்,இன பிற படைப்பாளிகள் இடம் பெற்றுள்ளனர்.இந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தி டாவின்சி கோட்திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.இயேசு நாதரின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் குறித்து படத்தில் கருத்துக்கள்வருகிறது என்பதற்காக இப்படத்தைத் தடை செய்திருப்பது நியாயமற்றது.
பெரியார் போன்ற தலைவர்களின் பாசறையிலிருந்து வந்த ஒரு தலைவரின்தலைமையிலான அரசு இத்தகைய மதச் சார்பான ஒரு போக்கை எடுத்திருப்பதுவருத்தம் தருகிறது. கருத்துச் சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடு விதித்திருப்பதுஆச்சரியமாக உள்ளது.
தி டாவின்சி கோட் படத்திற்கான தடையை நீக்க வேண்டும், கருத்துச் சுதந்திரத்தைக்காக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம் என அதில்கூறப்படடுள்ளது.
இந்த அறிக்கையில், எழுத்தாளர்கள் பிரபஞ்சன், தியோடர் பாஸ்கரன்,எம்.எஸ்.எஸ்.பாண்டியன், கோணங்கி, கவிஞர் மு.மேத்தா, மருது, பேராசிரியர்கல்யாணி, பழமலை ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications