For Daily Alerts
Just In
இந்தியாவில் படிக்க செளதியில் நுழைவுத் தேர்வு
துபாய்:
இந்தியாவில் தொழில்நுட்பப் படிப்புகளை படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்காக செளதி அரேபியாவில்நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன்சிங் கூறினார்.
துபாயில் செய்தியாளர்களிடம் அர்ஜூன் சிங் கூறியதாவது,வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்திய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியாவில் தொழில்நுட்பம்மற்றும் மேலாண்மை (மேனேஜ்மெண்ட்) படிப்புகளை படிக்க விரும்புகின்றனர்.
அவர்களுக்கு வசதியாக இந்த நுழைவுத் தேர்வுகளை செளதி அரேபியாவில் நடத்துவது பற்றி மத்திய அரசுபரிசீலித்து வருகிறது. மேலும் செளதியில் நுழைவுத் தேர்வு நடத்தினால் உயர் கல்வி கற்க ஆண்டுதோறும் 500மாணவர்களை இந்தியாவுக்கு அனுப்புவதாக செளதி மன்னரும் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக இந்தியா, செளதிக்கு இடையே கல்வி மேம்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது எனவும்அவர் தெரிவித்தார்.
Comments
Story first published: Thursday, June 8, 2006, 5:30 [IST]