அரசு பிஆர்ஓக்கள் 24 பேர் அதிரடி மாற்றம்
சென்னை:
தமிழகம் முழுவதும் மாவட்ட அரசு செய்தித் தொடர்பு அதிகாரிகள் கூண்டோடுஅதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கோட்டை, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள், மாநகராட்சிகளில்அரசு செய்தித் தொடர்பு அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள்.அவர்களில் 20 செய்தித் தொடர்பு அதிகாரிகள் மற்றும் 4 உதவி அதிகாரிகள்ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி மதுரை மாவட்ட செய்தித் தொடர்பு அதிகாரியாக சங்கரவடிவேலு,சென்னை செய்தி வெளியீட்டுப் பிரிவு அதிகாரியாக அம்பலவாணன், கிருஷ்ணகிரிமாவட்ட அதிகாரியாக எஸ்.ஆர்.சாரதி,
திருவள்ளூர் மாவடடத்திற்கு கிருஷ்ணமூர்த்தி, சேலம் மாவட்டத்திற்கு கண்ணதாசன்,நாமக்கல் மாவட்டத்திற்கு மனோகரன், திருவாரூர் மாவட்டத்திற்கு பேரின்பநாயகம்,
சேலம் மாநகராட்சிக்கு தானப்பா, தர்மபுரி மாவட்டத்திற்கு பழனிச்சாமி,தூத்துக்குடிக்கு கிரிராஜன், கன்னியாகுமரிக்கு எழில் அழகன், விழுப்புரத்திற்குசண்முகசுந்தரம், சென்னை தமிழரசு அலுவலக செய்தி அதிகாரியாக சந்திரன்,
கலைவாணர் அரங்க அதிகாரியாக கலைமணி ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை தலைமையக நினைவகப் பிரிவு அதிகாரியாக பழனியப்பன்நியமிக்கப்பட்டுள்ளார்.
கருணாநிதிக்கு புதிய செயலாளர்:
இந் நிலையில் முதல்வர் கருணாநிதியின் புதிய செயலாளராக காசிவிஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரியான இவர் இதுவரை உள்துறையின் சிறப்புச் செயலாளராக இருந்து வந்தார்.












Click it and Unblock the Notifications