இட ஒதுக்கீடு: புதுக் கரடியல்ல- ப.சிதம்பரம்
சென்னை:
நீதித்துறையிலும் இடஓதுக்கீடு வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
கல்வியாளர் பேரவை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் சமூக நீதி நாள் விழா கொண்டாடப்பட்டது.இக்கூட்டத்துக்கு மாநில திட்டக்குழு துணைத்தலைவர் மு.நாகநாதன் தலைமை வகித்தார்.
அதில், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில்,
பொருளதாரரீதியிலும், சமூகரீதியாகவும் பின் தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை புது கரடிஎன்கிறார்கள். இது புது கரடி அல்ல ஜந்தாயிரம், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கரடி தான் இது என்றார்.
![]() |
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், இந்தியாவில் 600 நீதிபதிகள் இருக்கின்றனர். அதில் 10 பேர்தான் தலித், இந்த நிலையில் நீதி எப்படி இருக்கும் என்று யோசிக்க வேண்டும். உயர்கல்விநிறுவனங்களையடுத்து, நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும். இதற்கு தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டமக்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்றார்.
தி.க தலைவர் கி.வீராமணி பேசுகையில், அனைவரும் அர்ச்சகராகலாம் என்று கருணாநிதி சட்டம் கொண்டுவந்துவிட்டார். இனி ஜாதியை யாரும் காப்பாற்ற முடியாது. சமூகத்தின் மீது இருந்த வர்ணாசிரம முள்ளைகருணாநிதி அகற்றியுள்ளார் என்றார்.
இக் கூட்டத்தில் கல்வியாளர் பேரவை கருணாநந்தம் உள்ளிட்ட பலரும் கூறினார்.













Click it and Unblock the Notifications