காவிரி: மைசூரில் நாளை விவசாயிகள் சந்திப்பு
மைசூர்:
கர்நாடகம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள்சங்கங்களின் சார்பில் நாளை மைசூரில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
காவிரி குடும்பம் என்ற பெயரில் தமிழக மற்றும் கர்நாடக மாநில காவிரிப் பாசனப்பகுதி விவசாயிகள் இணைந்து புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.காவிரி நீரை இரு மாநில விவசாயிகளும் எப்படிப் பங்கிட்டுக் கொள்வது என்பதுகுறித்து இந்த அமைப்பினர் இதுவரை மொத்தம் 6 முறை பேச்சுவார்த்தைநடத்தியுள்ளனர்.
சென்னை, திருச்சி, தஞ்சாவூர், பெங்களூர், மைசூர் ஆகிய ஊர்களில் இந்த சந்திப்புநடந்துள்ளது. தற்போது மைசூரில் 3வது முறையாக சந்தித்துப் பேசவுள்ளனர். இந்தசந்திப்பு திங்கள்கிழமை நடைபெறுகிறது.
இந்த சந்திப்பின்போது காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக முக்கிய விவாதம்நடைபெறவுள்ளது. இந்த சந்திப்புகளின் பலனாக இரு மாநில விவசாயிகளுக்கும்இடையே நல்லுணர்வும், புரிந்து கொள்ளுதலும் ஏற்பட்டிருப்பதாகவும், இரு மாநிலவிவசாயிகளுக்கிடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளதாகவும் கர்நாடக மாநிலவிவசாயிகள் சங்கத் தலைவர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications