குடும்பத்தை காக்க சவரம் செய்யும் பெண்
தர்மபுரி:
தந்தையின் திடீர் மரணத்தால் குடும்பம் தள்ளாடியதைத் தொடர்ந்து அவர் பார்த்துவந்த சவரத் தொழிலை அவரது 15 வயது மகள் செய்து வருகிறார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம், அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்தவர்கிருஷ்ணன். சவரத் தொழில்தான் இவரது குடும்பத் தொழில். கிருஷ்ணன் திடீரெனஇறந்து விட்டார்.இதனால் அவரது குடும்பம் பொருளாதார ரீதியில் சிரமப்பட்டது. கிருஷ்ணனின்மறைவால் அவரது 15 வயது மகள் தேவிபாலா மீது குடும்பப் பொறுப்பு விழுந்தது.
இதையடுத்து தனது படிப்புக் கனவை மூட்டை கட்டி வைத்த தேவிபாலா தந்தையின்தொழிலான சவரத் தொழிலை மேற்கொள்ள ஆரம்பித்தார். இப்போது இத்தொழிலில்இவருக்கு ஐந்து ஆண்டு அனுபவம் உள்ளது.
தனது 10வது வயதில் சவரத் தொழிலை செய்ய ஆரம்பித்த தேவிபாலா, ஆண்களுக்குநிகராக இத்தொழிலில் திறம்பட ஈடுபட்டுள்ளார்.
இவரது வீட்டு முன்பாகவே தனது கடையை போட்டுள்ளார் தேவிபாலா.இத்தொழிலை வருத்தப்பட்டு நான் செய்யவில்லை. பெண்களுக்கான மிகப் பெரியசலூன் கடையை ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது.
அதேபோல மிகப் பெரிய அழகுக்கலை நிபுணராகவும் வர வேண்டும் எனஆசைப்படுகிறேன். என்னைப் போல சவரத் தொழில், அழகுக் கலை, சிகை கலைஉள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்டவர்களை சேர்த்து சுய உதவிக் குழுக்களைஆரம்பிக்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறேன் என்கிறார்தேவிபாலா.
தேவிபாலாவின் சவரத் தொழில் அவரது குடும்பத்தை இப்போது நிம்மதியாகவைத்திருக்கிறது. தினசரி ரூ. 40 வரை சம்பாதிக்கிறார் தேவிபாலா. ஆனால் இதைவிரிவுபடுத்தி மிகப் பெரிய சலூனை அமைக்க அவர் பேராவல் கொண்டுள்ளார்.நிச்சயம் ஒரு நாள் சாதிப்பார்.












Click it and Unblock the Notifications