சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கிகுண்டுகளுடன் பிடிபட்ட சாப்ட்வேர் என்ஜினியர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து ஜெர்மன் செல்லவிருந்த சாப்ட்வேர் என்ஜினியர் விமான நிலையத்தில் துப்பாக்கிக்குண்டுகளுடன் பிடிபட்டார்.
நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் லுப்தான்ஸா விமானம் மூலம் சீனிவாசன் (42) என்ற சாப்ட்வேர் என்ஜினியர்பிராங்பர்ட் செல்லவிருந்தார்.விமான நிலையத்தில் அவரது பைகள் சோதனையிடப்பட்டபோது அவர் வைத்திருந்த லேப்-டாப்பிற்குள் 3துப்பாக்கிக் குண்டுகள் இருந்தன.
இதையடுத்து அவரை போலீசார் விசாரித்தபோது, என் பையில் இந்த குண்டுகள் எப்படி வந்தது என்று எனக்குத்தெரியாது சீனிவாசன் கூறியுள்ளார். இவர் சென்னை கே.கே. நகரைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் பணியாற்றிவருகிறார். பிராங்க்பர்ட் வழியாக அவர் அமெரிக்கா செல்ல இருந்தார்.
குண்டுகளுடன் அவர் சிக்கியதால் அவரை போலீசார் பயணம் செய்ய விடவில்லை. அவரிடம் தொடர்ந்துவிசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications