ஜெ மீதான வருமான வரி வழக்கில் இன்று தீர்ப்பு
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யாத வழக்கில் குற்றச் சாட்டுக்களைப் பதிவு செய்யலாமா,வேண்டாமா என்பது குறித்து இன்று மாலை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றத்தடுப்பு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு அளிக்கவுள்ளது.
கடந்த 1993-94ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை ஜெயலலிதாவும்,சசிகலாவும் தாக்கல் செய்யவில்லை. இதைத் தொடர்ந்து அவர்கள் மீது சென்னைபொருளாதாரக் குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்குதொடர்ந்தது.இந்த வழக்கின் விசாரணையில் தாமதம் நிலவி வந்ததால், உடனடியாககுற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்வருமான வரித்துறை மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம மனுவைத் தளளுபடி செய்தது. இதையடுத்துஉச்சநீதிமன்றத்தை வருமான வரித்துறை அணுகியது.
அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து குறித்து4 மாதங்களுக்குள் முடிவெடுத்து அறிவிக்குமாறு சென்னை நீதிமன்றத்திற்குஉத்தரவிட்டது.
இதையடுத்து சென்னை பொருளாதாரக் குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில் இரு தரப்புவழக்கறிஞர்களின் வாதம் தொடங்கியது. வாதம் முடிவடைந்து இன்றைக்கு தீர்ப்புஒத்திவைக்கப்பட்டது.
ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதான வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவுசெய்யலாமா என்பது குறித்து இன்று மாலை நீதிபதி ராஜ் தீர்ப்பளிக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications