காவிரி: கருணாநிதிக்கு திருமாவளவன் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரிப் பிரச்சினை குறித்தி விவாதிக்க உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைகூட்ட வேண்டும் என்று கோரி முதல்வர் கருணாநிதிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிபொதுச் செயலாளர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவிரி நடுவர் மன்றத்தின் ஆயுட்காலம் வருகிற ஆகஸ்ட் மாதம் முடிவடைகிறது.இதனால் அதற்குள் இறுதித் தீர்ப்பை வழங்க வேண்டிய சூழல் எழூந்துள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தால் நியமிக்கப்பட்ட மதிப்பீட்டாளர் குழுவின் பரிந்துரைகளைகர்நாடகம் தற்போது புறக்கணித்து விட்டது.

தமிழகத்துக்கு 394.85 டிஎம்சி நீர் போதுமானது என்று மதிப்பீட்டாளர்கள் குழுபரிந்துரைத்துள்ள நிலையில் அதனை கர்நாடக அரசு மறுத்துள்ளது.

அத்தோடு அனைத்துக் கட்சிகளின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி நடுவர்மன்றத்துக்கு அனுப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எந்த நியாயத்துக்கும் கர்நாடகம் உட்படுவதாக தெரியவில்லை.

தமிழகத்தின் நிலையை நடுவர் மன்றத்துக்கு அறிவிப்பதற்கான காலக்கெடுமுடிவடைய ஒரு சில நாட்களே உள்ளது. இந் நிலையில் இதுபற்றி கலந்தாய்வு செய்துமுடிவெடுக்கவும் தமிழக மக்களின் ஒற்றுமை மற்றும் ஒட்டுமொத்த உணர்வுகளைவெளிப்படுத்தவும் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தாங்கள் கூட்டவேண்டும்.

இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+