முன்னாள் ஐ.ஜி. அருள் மரணம்
சென்னை:
தமிழக காவல்துறையின் மிகச் சிறந்த தலைவர் என்று போற்றப்பட்ட முன்னாள்ஐ.ஜியான எப்.வி.அருள் சென்னையில் இன்று மரணமடைந்தார்.
தமிழக காவல்துறையில் முன்பு ஐ.ஜி பதவிதான் உயர்ந்த பதவியாக இருந்து வந்தது.அந்தப் பதவியை கடைசியாக வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் அருள்.
![]() |
அண்ணா முதல்வராக இருந்தபோது அவரிடமே துணிவாக தனது முடிவுகளை கூறக்கூடிய அளவுக்கு மிக்ச சிறந்த, நேர்மையான அதிகாரியாக இருந்தவர் அருள்.
அருள் 1976ம் ஆண்டு ஐ.ஜி. பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர்காவல்துறை தலைவர் பதவி (டிஜிபி) பதவி உருவாக்கப்பட்டு அமலுக்கு வந்தது.
88 வயதான அருள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ளதுஅவரது இல்லத்தில் மரணமடைந்தார். அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
அருளின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம்வாழையடி கிராமத்தைச் சேர்ந்த அருள், சிபிஐ இயக்குனராகவும் இருந்தவர்.அப்போது பல முக்கிய வழக்குகளை விசாரித்துள்ளார்.
இதுதவிர இன்டர்போல் அமைப்பின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தசிறப்புக்குரியவர் அருள்.
அருளின் உடலுக்கு தமிழக டிஜிபி முகர்ஜி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர்லத்திகா சரண் உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர்.













Click it and Unblock the Notifications