திருச்சியைக் கலக்கும் கலைஞர் கற்கோவில்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சி அருகே உள்ள சமயபுரத்தில் கிருஷ்ணர் கோவிலில் கருணாநிதியின் படத்தைவைத்து தினசரி பூஜைகள் செய்து வருகிறார் தேவாரம் நாராயண பட்டர் என்றஅர்ச்சகர்.

கிருஷ்ணர் கோவில் கட்டி அங்கு தினசரி பூஜை செய்து வந்த நாராயண பட்டர்இப்போது இந்தக் கோவிலில் முதல்வர் கருணாநிதியின் படத்தையும் வைத்துஅதற்கும் தினசரி அர்ச்சனை செய்து வருகிறார். இக்கோவிலுக்கு கலைஞர் கற்கோவில்என்றும் பெயர் வைத்துள்ளார்.

இதுகுறித்து நாராயண பட்டர் கூறுகையில், கலைஞர் பெரியார் சீடராக இருக்கலாம்.ஆனால், நமது சாஸ்திரப்படி, பெரியவர்களை கடவுளுக்கு சமமாக வைத்து வணங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நான் படையாச்சி (வன்னியர்) வகுப்பைச் சேர்ந்தவன். கோவில்களில் எந்தசாதியினரும் அர்ச்சகர்களாக ஆகலாம் என்று கருணாநிதி பிறப்பித்துள்ள உத்தரவு மிகஅருமையானது.

அதனால்தான் எனது கோவிலில் கருணாநிதி படத்தையும் வைத்து கிருஷ்ணருக்குசமமாக அவரையும் வணங்கி, ஆராதனை செய்து வருகிறேன்.

கிருஷ்ணரை எப்படி நான் பக்தியுடன் வணங்கி, வழிபடுகிறேனோ, அதேபோலகருணாநிதியையும் வணங்கி பூஜை செய்து வருகிறேன் என்கிறார் பட்டர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஒரு துண்டுப் பிரசுரத்தையும் அவர்வினியோகிக்கிறார்.

அதில், கலைஞர் கற்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நல்வரவு. பெரியவா சொன்னாபெருமாள் சொன்ன மாதிரி. பெரியார் தம்பி கலைஞர் சொன்னா அதையும் கடவுள்சொன்னது போலவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வாசகங்கள் போகிறது.

கையில் செல்போனுடன் (பக்திப் பாடல்கள்தான் இதில் ரிங் டோன்!) வலம் வரும்நாராயண பட்டர், கருணாநிதிக்கு ஏகத்துக்கும் ஜால்ரா அடிப்பதன் பின்னணிதெரியவில்லை.

கோவிலுக்குள் தனது படத்தை வைத்து பூஜிப்பதை திராவிட சித்தாந்தத்தில் ஊறியமுதல்வர் தடுப்பதே கோவிலுக்கு நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+