இலவச கலர் டிவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
சென்னை:
தமிழக அரசின் இலவச கலர் டிவித் திட்டத்தை தடை செய்யக் கோரி தாக்கல்செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
சென்னை பெரியமேட்டைச் சேர்ந்த பாட்சா என்ற 76 வயது ஓய்வு பெற்ற கல்லூரிஆசிரியர் உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், தேர்தல் தேதிஅறிவிக்கப்பட்ட பிறகு திமுக தனது தேர்தல் அறிக்கையில், பொதுமக்களுக்கு கலர்டிவி, கேஸ் அடுப்பு ஆகியவற்றை வழங்குவதாக அறிவித்தது.
இது நடைமுறைக்கு ஒத்து வராது. கலர் டிவியை இலவசமாக கொடுக்க வேண்டும்என்றால் ஒரு டிவி ரூ. 5,000 என்று வைத்துக் கொண்டாலும் இந்தத் திட்டத்தைநிறைவேற்றுவது மிகக் கடினம். மக்களை ஏமாற்றும் திட்டம் இது.
இந்தத் திட்ட அறிவிப்பைத் தடுத்து நிறுத்தக் கோரி காவல் நிலையத்தில் புகார்கொடுத்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதுதொடர்பாக புகார்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கியபெஞ்ச் இன்று விசாரித்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் யாரும்ஆஜராகவில்லை.
இதையடுத்து மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications