விரைவில் ஆட்சி மாறும்: வைகோ ஜோசியம்
திருநெல்வேலி:
இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நெல்லையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வைகோபேசுகையில், அதிமுக கூட்டணியில் மதிமுக உறுதியாக இருக்கிறது. இரு கட்சிகளும்ஒரு கொடியில் பூத்த மலர்கள். பலம் வாய்ந்த கட்சி அதிமுக, அதிக வாக்கு வங்கிஉள்ள கட்சி அதிமுக.இதை யாராலும் மறுக்க முடியுமா?
விரைவில் ஆட்சி மாற்றம் வரும். இந்த ஆண்டு இறுதிக்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடும். அதிமுகவுக்குக் கிடைத்தது தோல்வி அல்ல. வெறும் 4 சதவீத வாக்குவித்தியாசத்தில்தான் அதிமுக தோற்றிருக்கிறது.
ஆட்சிக்கு வருவதற்காக காத்திருந்து, வந்தவுடன் பெட்ரோல், டீசல் விலையைஉயர்த்தி விட்டனர். டெல்லிக்குப் போன கருணாநிதியிடம், மதிமுக குறித்த நிருபர்கள்கேட்டதற்கு, அது எங்கே இருக்கிறது என்று கேட்டுள்ளார். 4 எம்.பிக்கள், 6எம்.எல்.ஏக்களுடன் இருக்கிற ஒரு கட்சியை எங்கே இருக்கிறது என்று கேட்கலாமா?
நாகர்கோவிலில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சி எம்.பியை போலீஸார்ஓட ஓர விரட்டி அடித்திருக்கிறார்கள். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் அரசைஏதாவது கேட்டார்களா?
எதிர்ப்பாவது தெரிவித்தார்களா? ஆனால் நான் காவல்துறையின் அராஜகத்தைக்கண்டிக்கிறேன். இதுதான் ஜனநாயகமா?
காவல்துறையின் நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது. புதிய ஆட்சி வந்த பிறகுகாவல்துறையின் அடக்குமுறை அதிகரித்துக் கொண்டே போகிறது என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications