வாஞ்சி நாதனுக்கு மணிமண்டபம்: குமரி அனந்தன்
சென்னை:
வீர வாஞ்சிநாதனுக்கு செங்கோட்டையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்றுமுன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மணியாச்சி ரயில் நிலையத்திற்குவீர வாஞ்சிநாதனின் பெயரை சூட்ட வேண்டும் என்று தென் மாவட்டங்களுக்கு முன்புசுற்றுப்பயணம் வந்தபோது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு நான் கோரிக்கைவைத்தேன்.அதை ஏற்ற அவர் மணியாச்சி ரயில் நிலையம் இனி வாஞ்சிமணியாச்சி என்றுஅழைக்கப்படும் என அறிவித்தார்.
அதற்கு முன்பாகவே செங்கோட்டையில் கரையாளர் பூங்காவில் வாஞ்சிநாதனுக்குமணிமண்டபம் கட்ட பெருந்தலைவர் காமராஜர் முயற்சிகள் எடுத்தார்.
பல காலமாக அத்திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது. சமீபத்தில் நான்அங்கு சென்று பார்த்தபோது அடிக்கல் நாட்டப்பட்டதற்கான கல்வெட்டைக் கூடஅங்கு காணவில்லை. அதை தேடி எடுத்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம்.
தற்போதைய திமுக அரசு, வாஞ்சிநாதனுக்கு செங்கோட்டையில் மணிமண்டபம் கட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் நிலையத்தில் சிறிய பூங்காவை எழுப்பி அதற்குநடுவே வாஞ்சி நாதனின் சிலையை நிறுவ வேண்டும் என்று கூறியுள்ளார் குமரிஅனந்தன்.












Click it and Unblock the Notifications