சிவனாண்டி: தமிழக அரசுக்கு தடை நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பதவி இறக்கம் செய்யப்பட்ட பணியில் டிஐஜி சிவனாண்டியை சேருமாறுவலியுறுத்தக் கூடாது என்று தமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும்2 வாரத்திற்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உளவுப் பிரிவு டிஐஜியாக இருந்து வந்த சிவனாண்டியை திமுக அரசு எஸ்.பியாகபதவி இறக்கம் செய்து திருச்சி ஊர்க்காவல் படைக்கு மாற்றியது. இதை எதிர்த்துசென்னை உயர்நீதிமன்றத்தில் சிவனாண்டி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிவனாண்டி பதவி இறக்கம் செய்யப்பட்டதுதொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், பணிஇறக்கம் செய்யப்பட் பணியில் சேருமாறு சிவனாண்டியை நிர்பந்திக்கக் கூடாதுஎன்றும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதுதமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் 2 வாரத்திற்கு நீட்டித்துநீதிபதிகள் தர்மாராவ், சுகுணா ஆகியோர் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கைவேறு டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றியும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications