இலங்கை: வாயில் சுட்டு 4 தமிழர்கள் படுகொலை30 புலிகள் பலியாகவில்லை-ராணுவம் புரளி?
கொழும்பு:
இலங்கையின் பேசாலை பகுதியில் தமிழ் மீனவர்கள் நான்கு பேரை அவர்களதுவாயில் சுட்டு இலங்கை கடற்படையினர் கொன்ற தகவல் இப்போதுவெளியாகியுள்ளது.
2 நாட்களுக்கு முன்பு விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவுக்கும்,கடற்படைக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. நடுக் கடலில் நடந்த இந்தமோதலில் இரு தரப்பிலும் சேர்த்து 42 பேர் பலியானார்கள்.இரு தரப்பினரின் படகுகளும் மூழ்கடிக்கப்பட்டன.
இந்தத் தாக்குதலால் ஆத்திரமுற்ற இலங்கை கடற்படையினர் விடுதலைப் புலிகள் மீதுகாட்ட முடியாத தங்களது கோபத்தை அப்பாவித் தமிழர்கள் மீது திருப்பினர்.
கடலோர பகுதியான பேசாலைக்கு கடற்படை வீரர்கள் விரைந்தனர். அங்கு தமிழர்கள்அதிக அளவில் வசிக்கின்றனர்.
பேசாலை மீனவர் குடியிருப்புகளில் புகுந்து சரமாரியாக சுட்டுத் தள்ளினர்.
இதில் 40க்கும் மேற்பட்ட தமிழர்கள் காயமடைந்தனர். 40க்கும் மேற்பட்ட மீன் பிடிபடகுகளையும் தீவைத்துக் கொளுத்தினர். மீன் பிடி வலைகளையும் சேதப்படுத்தினர்.
மேலும், நான்கு தமிழ் மீனவர்களைப் பிடித்து அவர்களது வாயில் சுட்டு கொடூரமாகபடுகொலை செய்தனர். கடற்படை வீரர்களின் வெறித் தாக்குதலால் பீதியடைந்ததமிழர்கள் அங்குள்ள பேராலயத்தில் அடைக்கலம் புகுந்தனர்.
ஆனால் வெறி தணியாத கடற்படையினர் பேராலயத்திற்குள்ளும் தாக்குதல்நடத்தினர். 2 வெடிகுண்டுகளை உள்ளே வீசினர். இதில் ஒரு குண்டு வெடிக்கவில்லை.வெடித்த இன்னொரு குண்டுக்கு மானுவல் அம்மா லீமா என்ற மூதாட்டி பரிதாபமாகஇறந்தார்.
மன்னார் மாவட்ட கூடுதல் ஆட்சித் தலைவர் பிரபாகரன் அங்கு வந்துகடற்படையினரை தடுத்து நிறுத்திய பிறகே வெறி தணிந்து அவர்கள் வெளியேறினர்.இத்தகவல்களை பேசாலை பகுதி பேராலய பேராயர் ராயப்பு ஜோசப் கூறியுள்ளார்.
30 புலிகள் பலியில்லை..:
இதற்கிடையே கடலில் நடந்த சண்டையில் 30 விடுதலைப் புலிகள் பலியானதாகஇலங்கை ராணுவமும் அரசும் புரளி கிளப்பி விட்டுள்ளதாக புலிகள் தரப்பில்கூறப்பட்டுள்ளது. இந்த சண்டையில் 2 புலிகள் காயம் மட்டுமே அடைந்துள்ளதாகவும்புலிகள் கூறியுள்ளனர்.
தமிழக அரசு தலையிட புத்த பிக்குகள் கோரிக்கை:
இந் நிலையில் இலங்கைப் பிரச்சினையில் உடனடியாக தமிழக அரசு தலையிட்டுசுமூகத் தீர்வு ஏற்பட உதவ வேண்டும் என்று இலங்கை மஹா போதி அமைப்பைச்சேர்ந்த பிக்குகள் விடுத்துள்ளனர்.
இலங்கை இனப் பிரச்சினையில் தமிழக அரசும், இந்திய அரசும் மெளனம் சாதித்துவருகின்றன.
இந் நிலையில் தமிழக அரசுக்குத்தான் இலங்கைப் பிரச்சினையில் அதிக பங்குஉள்ளது என்று இலங்கையைச் சேர்ந்த மஹா போதி சங்கம் என்ற புத்த பிக்குகள்அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் தமிழக பொருப்பாளர் ரத்னஜோதி கூறுகையில், இலங்கையில்தற்போது நடக்கும் நிகழ்வுகள் கவலை தருவதாக உள்ளன. அமைதிக்கு அங்குமீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு இனியும் இலங்கை பிரச்சினையில் அமைதி காக்கக் கூடாது.இப்பிரச்சினையில் மற்றவர்களை விட தமிழகத்திற்கும், தமிழக அரசுக்கும்தான் அதிகபங்கு உள்ளது. இலங்கையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டு தமிழர்களும், சிங்களர்களும்அமைதியாக, இணக்கமாக வாழ தமிழக அரசு உதவ வேண்டும்.
பூகோள ரீதியிலும், சரித்திர ரீதியிலும் தமிழகத்திற்கும், இலங்கைக்கும் நெருங்கியஉறவும், தொடர்பும் உள்ளது. இலங்கைப் பிரச்சினையில் சுக தீர்வு ஏற்பட புத்தபிக்குகள் இடையூறாக இருப்பதாக கூறுவது தவறு. ஒரு சில பிக்குகள் அவ்வாறுஇருக்கலாம். ஆனால் பெரும்பாலான புத்த சாமியார்கள், அமைதியான தீர்வுஏற்படுவதையே விரும்புகிறார்கள், அதற்காக பிரார்த்தனையும் செய்து வருகிறார்கள்என்றார் ரத்னஜோதி.
போர் மூண்டால்.. புலிகள் எச்சரிக்கை:
இந் நிலையில் தமிழ் மக்கள் மீது சிங்கள் அரசு மீண்டும் போரைத் திணித்தால் எந்த வகையான தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் என புலிகளின்அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இ-மெயில் மூலம் அவர் அளித்துள்ள நேர்காணலில்,
போர் மூண்டால் அதை நாடு முழுவதும் பிரதிபலிக்கும் வகையில் எங்கள் பதில் தாக்குதல் இருக்கும். எங்கள் தாக்குதல் எந்த வகையில்வேண்டுமானாலும் இருக்கும், தற்கொலைத் தாக்குதல்கள் உள்பட என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications