For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சங்கார மருத்துவமனையை விற்க நீதிமன்றம் அனுமதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள சங்கர மடத்திற்குச் சொந்தமான தமிழ்நாடு(சங்கரா) மருத்துவமனையை பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய சென்னைஉயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பெரும்பாக்கத்தில் காஞ்சி காமகோடி கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான சங்கராமருத்துவமனை உள்ளது. இதை ரூ. 105 கோடிக்கு விற்பனை செய்ய அறக்கட்டளைமுடிவு செய்தது.

மருத்துவமனை அறக்கட்டளைக்குச் சொந்தமானது என்பதால் விற்பனை செய்யஅனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை காஞ்சி காமகோடி கல்வி அறக்கட்டளைஅணுகியது.

இந்த மருத்துவமனையை வாங்க செட்டி நாடு மருத்துவமனை முன் வந்தது. ஆனால்இந்த விற்பனையை அனுமதிக்க மறுத்த உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி,அறக்கட்டளையின் கோரிக்கையை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து அறக்கட்டளை சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவைவிசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி முருகேசன் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.

அதன்படி, குறைந்தபட்ச விலையாக ரூ. 185 கோடி என நிர்ணயித்து இந்தமருத்துவமனையை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யலாம்.

ஏலம் குறித்து 3 முன்னணி நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.மருத்துவமனையை வாங்க விரும்புவோர், அதற்கான விலையை குறிப்பிட்டு சீல்வைக்கப்பட்ட உறையில் அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில்தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X