அதிமுக ஆட்சி முறைகேடு-வந்தது விசாரணை கமிஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக ஆட்சியில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதில்நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க முன்னாள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகதுணைவேந்தர் ஆளுடைய பிள்ளை தலைமையில் தமிழக அரசு விசாரணைக்கமிஷனை அமைத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த அதிமுக ஆட்சியில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், இடைநிலை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் தொடங்குவதற்கும் அனுமதி அளித்ததில்பலவேறு முறைகேடுகள் நடந்ததாக சட்டசபையில் பல்வேறு கட்சி உறுப்பினர்களும்புகார் தெரிவித்தனர்.

இந்தப் புகார்கள் குறித்து விசாரிக்க முதல்வர் கருணாநிதி விசாரணைக் குழுவைஅமைத்து உத்தரவிட்டுள்ளார்.

விசாரணைக் குழுவின் தலைவராக முன்னாள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகதுணைவேந்தர் ஆளுடைய பிள்ளை இருப்பார்.

உறுப்பினர் செயலாளராக மணி இருப்பார். உறுப்பினர்களாக சிவஞானம், விக்டர்,ஜெயசந்திர மோகன், ஆறுமுகம் ஆகியோர் இருப்பார்கள் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக அரசின் முறைகேடுகள் தொடர்பாக தற்போதைய அரசில்அமைக்கப்பட்டுள்ள முதல் விசாரணைக் கமிஷன் இது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் நிறைய கமிஷன்கள் களமிறங்கும் என்றும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+