சத்துணவில் பல்லி; 92 குழந்தைகள் மயக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 92 பள்ளிக் குழந்தைகள் மயக்கமடைந்தன.இதனால் பெற்றோர் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.

சென்னை வியாசர்பாடியில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு நேற்றுபிற்பகல் பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு பரிமாறப்பட்டது.

இந்த உணவை 128 மாணவ, மாணவியர் சாப்பிட்டனர். அனைவரும் 12 வயதுக்குஉட்பட்டவர்கள். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவர்களில் 92 பேர் தலை சுற்றி,வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.

இதனால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியமாக மயக்கமடைந்துவிழுந்த மாணவர்களை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பள்ளி ஆசிரியர்கள் அழைத்துச்சென்றனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மயக்க நிலைதெளிவிக்கப்பட்டது. மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் விரைந்து வந்துசாப்பாட்டைப் பரிசோதித்துப் பார்த்தனர்.

அப்போது சாப்பாட்டில் பல்லி விழுந்திருந்தது தெரிய வந்தது. சமையல் கூடத்தில்இருந்த சாம்பாரில் பல்லியின் வால் கிடந்தது தெரிய வந்தது.

மாணவர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல்தெரிந்ததும் பெற்றோர்கள் அங்கு விரைந்து வந்து பதட்டத்துடன் தங்களதுகுழந்தைகள் குறித்து விசாரித்தவண்ணம் இருந்தனர்.

பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. மகேந்திரனும் மருத்துவமனைக்குச் சென்றுகுழந்தைகளைப் பார்த்து நலம் விசாரித்தார்.

குழந்தைகள் அனைவருமே நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+