சத்துணவில் அழுகிய முட்டை: 3 பள்ளிகளைசேர்ந்த 288 மாணவர்கள் கடும் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

வேலூர்/திருவண்ணாமலை:

சத்துணவில் அழுகிய முட்டை பரிமாறப்பட்டதால் வேலூர் மற்றும் திருவண்ணாமலைமாவட்டங்களில் மூன்று பள்ளிகளைச் சேர்ந்த 288 மாணவ, மாணவியருக்கு வாந்தி,வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

திருவண்ணாமலை அருகே உள்ள சேப்பாப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது. இந்த முட்டையைசாப்பிட்ட 75 மாணவ, மாணவியருக்கு வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுமயங்கி விழுந்தனர்.

இதையடுத்து அந்த மாணவ, மாணவியர்களை டிராக்டர்கள், ஆட்டோக்களில்திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைஅளிக்கப்பட்டது.

சத்துணவில் வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிப் போய் இருந்ததால் தான்மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல ஆரணி அருகே உள்ள வேலப்பாடி கிராம நடுநிலைப்பள்ளியில்வழங்கப்பட்ட முட்டைகளும் அழுகி இருந்ததால் அதை சாப்பிட்ட 117 மாணவ,மாணவியருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

அழுகிய முட்டையை மாணவர்களுக்கு வழங்கியதாக சத்துணவு அமைப்பாளர்அலமேலு, ஆயாக்கள் அஞ்சலை, பவுன் ஆகியோர் பணி இடைநீக்கம்செய்யப்பட்டனர்.

அதே போல வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செட்டிக்குப்பம் ஆதிதிராவிடர்நல நடுநிலைப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 96 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்ஏற்பட்டது.

அவர்கள் சாப்பிட்ட முட்டைகளும் அழுகி இருந்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டது.முட்டையை சாப்பிட்ட மாணவர்கள் துர்நாற்றம் வீசுவதாக ஆசிரியர்களிடம்கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் அவர்கள் மயங்கி விழுந்தனர்.

இந்த சம்பவத்திலும் சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட்செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+