13 ஐபிஎஸ், 5 உயர் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை:
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 13 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பவன் ரெய்னா வெளியிட்ட செய்திக் குறிப்பில்,கடலோரக் காவல்படை டிஐஜியாக உமா கணபதி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.தொடர்பான செய்திகள் இவர் சென்னையில் சிபிசிஜடியில் டிஜஜியாக பணியாற்றினர்.
சென்னை சிபிசிஐடி சிறப்புப் படை டிஐஜியாக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்குமுன் இவர் சென்னையில் ஊர்க்காவல் படை டிஜஜியாக பணியாற்றினர்.
சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக ராஜசேகரன், சென்னைதலைமைச் செயலக பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராக மகேஷ்குமார் அகர்வால்நியமிக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.ராமனாதன் சென்னை ஆயுதக்காவல் படை டிஜஜியாகவும், கே. நந்தபாலன் சென்னை சமூக நீதி மற்றும்மனித உரிமை டிஜஜியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏ.பாரி திண்டுக்கல் மாவட்ட எஸ்பியாக ஆக மாற்றப்பட்டுள்ளார். இதற்குமுன் இவர் சேலம் அமலாக்கப்பிரிவுஎஸ்பியாக பணியாற்றினர்.
கே.என் சத்தியமூர்த்தி ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு சிறப்புப் பிரிவு (2)க்கு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.இதற்குமுன் இவர் திண்டுக்கல் மாவட்ட எஸ்பியாக பணியாற்றினர்.
சு. அருணாச்சலம் தலைமையக உதவி ஜஜியாக மாற்றப்பட்டுள்ளார். இதற்குமுன் இவர் சென்னையில் ஊழல்தடுப்பு மற்றும் லஞ்ச ஓழிப்பு எஸ்பியாக பணியாற்றினர்.
என்.ராஜசேகன் சென்னை வண்ணராப்போட்டை துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். இதற்குமுன் இவர்கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாக பணியாற்றினர்.
எஸ்.முருகன் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். இதற்குமுன் இவர் திருவண்ணாமலைஎஸ்பியாக பணியாற்றினர்.
பி.சி.தேன்மொழி திருவண்ணாமலை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். இதற்குமுன் இவர் கோவை மாவட்டஎஸ்பியாக பணியாற்றினர்.
சு. அருள்செல்வம் மதுரை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். இதற்குமுன் இவர் திருச்சிசட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக பணியாற்றினர்.
என்.கே. செந்தாமரைக் கண்ணண் திருநெல்வேலி மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். இதற்குமுன் இவர்தஞ்சாவூர் மாவட்ட எஸ்பியாக பணியாற்றினர்.
எஸ்.மனோகரன் தமிழ்நாடு சிறப்பு பட்டாலியனாக மாற்றப்பட்டுள்ளார். இதற்குமுன் இவர் மணிமுத்தாறுகமாண்டன்ட் மற்றும் கோவை மாவட்ட குற்றப்பிரிவு துணை கமிஷனராக பணியாற்றினர்.
ஏ.டி துரைகுமார் கோவை மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். இதற்குமுன் இவர் சென்னைவண்ணராப்பேட்டை உதவி கமிஷனராக பணியாற்றினர்.
மகேஷ் குமார் அகர்வால் சென்னை தலைமைச் செயலக பாதுகாப்புப் பிரிவு துணை கமிஷனராகமாற்றப்பட்டுள்ளார். இதற்குமுன் இவர் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பணியாற்றினர்.
ஜான் நிக்கல்சன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். இதற்குமுன் இவர் தஞ்சாவூர் குற்றப்பிரிவுகூடுதல் எஸ்பியாக பணியாற்றி வந்தனார்.












Click it and Unblock the Notifications