நடிகையை மிரட்டிய கேப்டன்
சென்னை:
நடிகர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவின்போது நடிகர்கள் விஜயகாந்த் மற்றும்ராதாரவி ஆகியோர் தன்னை ஆள் வைத்து தாக்கியதாக நடிகை தேவி சென்னைமாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்தவர் நடிகை தேவி. தற்போது சென்னை ஆழ்வார் திருநகரில்வசித்து வருகிறார். விஜயகாந்த், ராதாரவி ஆகியோருடன் பல படங்களில்நடித்துள்ளார்.
நானே ராஜா நானே மந்திரி படத்தில் விஜயகாந்த்தின் அத்தையாக நடித்துள்ளார்.இதுதவிர 200க்கும் மேற்பட்ட படங்களில் டப்பிங்கும் பேசியுள்ளார். டப்பிங்கலைஞர்கள் சங்கத் துணைத் தலைவராகவும் உள்ளார்.
கடந்த ஆண்டு நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் தேவி விஜயகாந்த்தை எதிர்த்துத்தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். அப்போது சிலர் போட்டியிலிருந்து விலகுமாறுதொலைபேசி மூலம் தேவியை மிரட்டியதாக புகார் கூறப்பட்டது.
மேலும் நடிகர்கள் விஜயகாந்த், ராதராவி ஆகியோரும் தன்னைத் தொலைபேசியில்பேசி மிரட்டியதாக தேவியே புகார் தெரிவித்தார்.
தேர்தலில் விஜயகாந்த் குழுவினர் வெற்ற பெற்றனர். புதிய நிர்வாகிகள் பதவியேற்புநிகழ்ச்சியின்போது அங்கு வந்த தேவியை சிலர் தாக்கினர். இதுகுறித்துதேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தேவி புகார் கொடுத்தார்.
அதில், விஜயகாந்த்தும், ராதாரவியும்தான் தன்னை ஆள் வைத்துத் தாக்கியதாகபுகாரில் தேவி தெரிவித்திருந்தார். ஆனால் அதிமுக ஆட்சியில் இந்தப் புகார் மீதுபோலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். அப்போது ராதாரவிஅதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
இந் நிலையில் இப்புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னைமாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரணிடம் நேரடியாக புகார் கொடுத்துள்ளார்தேவி.
அதில் அப்போது அதிமுக ஆட்சியில் இருந்ததாலும், ராதாரவி அதிமுகஎம்.எல்.ஏவாக இருந்ததாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்காவல்துறையினர் விட்டு விட்டனர். எனவே இப்போது அவர்கள் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
விஜயகாந்த்துடன் கடுமையாக மோதி வரும் தேவி, ஏற்கனவே சட்டசபைத் தேர்தலில்விருத்தாச்சலத்திலும் விஜயகாந்த்தை எதிர்த்துப் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.