For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலீஸ் செக்ஸ் டார்ச்சர்: அரவாணி தற்கொலை முயற்சி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஓரல் செக்ஸ், ஏனல் செக்ஸ் வைத்துக் கொள்ள போலீஸார் கட்டாயப்படுத்திகொடுமைப்படுத்தியதால் மனம் உடைந்த அரவாணி ஒருவர் சென்னையில்தற்கொலைக்கு முயற்சித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் ஒரு அரவாணி. 18வயதாகும் பாண்டியன், அழகாக இருப்பார். அரவாணியாக ஆன பின்னரும் கூடபெயரை மாற்றாமல் இருந்து வந்தார் பாண்டியன்.

பிழைப்புக்காக அப்பகுதியில் உள்ள சில அரவாணிகளுடன் சேர்ந்து பாண்டியனும்கடை கடையாக ஏறி இறங்கி காசு வாங்கி பிழைத்து வந்தார். சில சமயங்களில்பிச்சையும் எடுப்பாராம்.

இந் நிலையில் கடந்த ஐனவரி மாதம் திருட்டு வழக்கு ஒன்றில் பாண்டியனைபோலீஸார் கைது செய்தனர். பின்னர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில்அவர் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தார்.

தினசரி வியாசர்பாடி காவல் நிலையம் சென்று அங்கு கையெழுத்திட வேண்டும் என்றுஅவருக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

விடுதலையான முதல் 2 நாட்களுக்கு பாண்டியனுடன் அவரது தாயாரும் காவல்நிலையம் வந்துள்ளார்.

ஆனால் இனிமேல் பாண்டியன் மட்டும்தான் வர வேண்டும். நீ வரக் கூடாது என்றுபாண்டியனின் தாயாரை போலீஸார் எச்சரித்துள்ளனர். இதனால் தாயார் வராமல்பாண்டியன் மட்டும் தனியாக போகத் தொடங்கினார்.

காலை 11 மணிக்கு அவரை ஒரு காவலர் வந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்வார். அங்கு போனதும் துயரம் தொடங்குமாம். காவல் நிலையம் அருகேபழைய காவல் நிலைய கட்டடம் உள்ளது.

யாரும் பயன்படுத்தாமல் உள்ள அந்தக் காவல் நிலையத்திற்கு பாண்டியனை சிலகாவலர்கள் அழைத்துச் சென்று ஓரல் செக்ஸ், ஏனல் செக்ஸ் வைத்துக் கொள்ளச்சொல்லி கட்டாயப்படுத்தி, கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதற்கு பாண்டியன் உடன்படவில்லை. இதையடுத்து போலீஸார் அவரை அடித்துதுவைத்துள்ளனர். நாங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லையென்றால் உனதுசகோதரிகளை (அவர்கள் பெண்கள்) கற்பழித்து விடுவோம் என்று போலீஸார்மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்து போன பாண்டியன், வேறு வழியின்றி அவர்களுக்குஉடன்பட்டுள்ளார். தினசரி இந்தக் கொடுமை நடந்துள்ளது.

போலீஸாரின் கொடுமையால் வெறுத்துப் போன அவர் தற்கொலை செய்து கொள்ளமுடிவெடுத்து, வியாசர்பாடி காவல் நிலையம் முன்பு தீக்குளித்தார். உடனடியாகஅவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு 37 சதவீத தீக்காயத்துடன் உயிருக்குப் போராடி வருகிறார் பாண்டியன். இந்தசம்பவம் வியாசர்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X