கள்ள நோட்டு ஜனனி: முன் ஜாமீன் கோரும் நெல்லை ஜமீன்தார்
மதுரை:
கள்ள நோட்டு வழக்கில் இளம்பெண் ஜனனியைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம்கடம்பூர் ஜமீன்தார் ஜெகதீஷ் ராஜாவும் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
கஞ்சா வழக்கில் சிக்கி பின்னர் விடுதலையான ஜனனி, ரமீஜா அவரது கார் டிரைவர்சதீஷ் ஆகியோர் மீது கள்ள நோட்டு வழக்கை மதுரை போலீஸார் பதிவுசெய்துள்ளனர்.கஞ்சா வழக்கில் ஜனனி கைதான போது அவரிடமிருந்து ரூ.1.40 கோடிகைப்பற்றப்பட்டதாக போலீசார் கூறினார். ஆனால் இந்த பணம் கடம்பூர் ஜமீன்தார்ஜெகதீஷ் ராஜாவுக்கு சொந்தமானது என ஜனனி கூறினார்.
அதேபோல ஜமீன்தாரும் பணம் தன்னுடையது என்று நீதிமன்றத்தில மனு செய்தார்.
இந்தப் பணத்தில்தான் ரூ. 30 லட்சம் அளவுக்கு கள்ள நோட்டு இருந்ததாக புகார்எழுந்துள்ளது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஜனனி, ரமீஜா, சதீஷ் ஆகியோர் மதுரைஉயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று ஜெதகீஷ் ராஜாவும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications