மனைவியின் கள்ளக்காதல்; தலையைத் துண்டித்த கணவன்!
வேலூர்:
கள்ளக்காதலில் ஈடுபட்ட 50 வயது மனைவியின் தலையைத் துண்டித்து அதை வீட்டுவாசலில் வைத்து விட்டு போலீஸில் சரணடைந்தார் அவரது கணவர்.
சென்னையில் கள்ளக்காதலால் நடந்துள்ள 2 பரபரப்பான கொலைகள் தமிழகத்தைஉலுக்கி வரும் நிலையில வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே கள்ளக்காதலில்ஈடுபட்ட மனைவியின் தலையைத் தனியாக துண்டித்து வீட்டு வாசலில் வைத்ததுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரக்கோணம் அருகே தக்கோலம் என்ற பகுதியைச் சேர்ந்தவர். இதற்கு அருகே உள்ளமாங்காட்டுச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். 60 வயதான இவரது மனைவிகனகா. இவருக்கு 50 வயதாகிறது.
கனகாவுக்கும், அவரது வயதை விட பாதி வயதே உடைய காளி என்பவருக்கும்கள்ளக்காதல் பூத்தது. இருவரும் கடந்த சில மாதங்களாக கள்ளக்காதலில் மூழ்கிசந்தோஷமாக இருந்து வந்தனர்.
இந்த விவகாரம் லோகநாதனுக்குத் தெரிய வந்தது.
இந்த வயதில் இது தேவையா என்று மனைவியை கண்டித்துள்ளார் லோகநாதன்.ஆனாலும் காளியுடனான தொடர்பைத் துண்டிக்க விரும்பவில்லை கனகா.
இதனால் கோபமடைந்த லோகநாதன், நேற்று பகல் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கனகாவின் தலையை அரிவாளால் வெட்டி தனியாக எடுத்தார். பின்னர்தலையை தாறுமாறுகா அரிவாளால் வெட்டிச் சிதைத்தார்.
பிறகு தலையையும், அரிவாளையும் வீட்டுக்கு வெளியே கொண்டு வந்து வாசலில்வைத்து விட்டு நேராக காவல் நிலையம் சென்று சரண் அடைந்தார். அவரைபோலீஸார் கைது செய்து கனகாவின் உடல் மற்றும் தலையை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications