மகன் பெயில்-ஆசிரியர் மூக்கை உடைத்த ஆட்டோ டிரைவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேர்வில் மகன் தேர்ச்சி பெறாததால் கோபமடைந்த ஆட்டோ டிரைவர் மகனின்வகுப்பு ஆசிரியரை தாக்கி அவரது மூக்கை உடைத்தார். இதையடுத்து அந்தஆட்டோகாரரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்தவர்அரவிந்தன். இவர் தேர்வில் தோல்வியுற்றதால் 10ம் வகுப்புக்குச் செல்லமுடியவில்லை.

இந் நிலையில் அரவிந்தனின் தந்தையான ஆட்டோ டிரைவர் பால்ராஜ், பள்ளிக்குச்சென்று அரவிந்தனின் ஆசிரியர் வீரராகவனிடம் விசாரித்துள்ளார்.

பையன் சரியாகப் படிக்கவில்லை என்பதை விளக்கினார் ஆசிரியர். ஆனால், ஆட்டோடிரைவர் ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் இறங்கினார்.

ஒரு கட்டத்தில் வீரராகவனின் முகத்தில் குத்தினார் ஆட்டோ டிரைவர். இதில்ஆசிரியரின் மூக்கு உடைந்தது. ரத்தம் கொட்டியது. இதனால் அங்கு பரபரப்புஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆசிரியர் வீரராகவன் புகார்கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் பால்ராஜைக் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+