மிஸ் கூவாகம் டயானா மரணம்!
சேலம்:
சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மிஸ் கூவாகம் பட்டம் பெற்றஅரவாணி டயானா மரணம் அடைந்தார்.
![]() |
இவர் கடந்த 12ம் தேதி பலத்த தீக்காயத்துடன் சேலம் அரசு மருத்துவமனைக்குக்கொண்டு வரப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு டயானாவுக்குசிகிச்சை அளிக்கப்பட்டது. டயானா உயிருக்குப் போராடி வரும் தகவல் அறிந்ததும்மும்பையிலிருந்து ஏராளமான அரவாணிகள் சேலம் வந்ததனர்.
இந் நிலையில், சிகிச்சை பலனின்றி டயானா மரணமடைந்தார். இதையடுத்துமருத்துவமனையில் குவிந்திருந்த 300க்கும் மேற்பட்ட அரவாணிகள் கதறி அழுதனர்.
மிஸ் கூவாமாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் பிரபலமடைந்த டயானா இந்த விழாவைத்தொடர்ந்து மும்பைக்குச் சென்றார். அங்குள்ள அரவாணிகளுடன் கிட்டத்தட்ட ஒருஆண்டு தங்கியிருந்தார். பின்னர்தான் சேலம் திரும்பினார்.
தீக்காயத்துடன் மருத்துவனைக்குக் கொண்டு வரப்பட்டபோது, போலீஸாரிடம்டயானா கொடுத்த வாக்குமூலத்தில்,
ஓமலூர் அருகே உள்ள வெங்காயக்கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தஒருவரால்தான் தனக்கு இந்த கதி நேர்ந்தது. அவர் ஒரு கஸ்டமருடன் உல்லாசமாகஇருக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார். நான் மறுத்ததால் தான் தீ வைத்துவிட்டார்என்று கூறியிருந்தார்.













Click it and Unblock the Notifications