தலைமைச் செயலகத்தில் தீவிபத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலக புதிய கட்டடத்தில்இரவில் தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்துதவிர்க்கப்பட்டது.
சென்னை கோட்டை வளாகத்தில் தலைமைச் செயலகம் உள்ளது. 10 மாடிகளைக்கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தின் 6 வது மாடியில் நேற்று இரவு 9மணிக்கு மேல் தீவிபத்து ஏற்பட்டது.அங்குள்ள குளிர்சாதனப் பெட்டியில் பிடித்த தீ அறைக்குள் பரவ ஆரம்பித்தது.உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். உடனடியாகதீவிபத்து பார்க்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மின் கசிவே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications