For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பத்திரங்களில் புகைப்படம்: தமிழக அரசு உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சொத்துப் பத்திரப்பதிவின்போது விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்களைஒட்டும் முறை இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது.

இதுதொடர்பாக தமிழக பதிவுத்துறை செயலாளர் முத்துச்சாமி வெளியிட்டுள்ளஅறிக்கை:

தமிழ்நாட்டில் பத்திரப் பதிவுத் துறையில் ஆவணங்கள் பதிவு செய்யப்படும்போதுபின்பற்றப்படும் நடைறையில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது தமிழக அரசு.

பத்திரப்பதிவில் ஆள் மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில் இந்த மாற்றம்செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஆவணங்களில் புகைப்படம் ஒட்டி பதிவு செய்தல்கட்டாயமாக்கப்படுகிறது. விற்பனை ஆவணங்களைப் பொறுத்து சொத்தைவிற்பவர்கள் மற்றும் வாங்குபவர்களின் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்ஒட்டப்படுவதும், கைரேகையை பதிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது.

ஆவணங்களைத் தவிர உயில், அடமானம், செட்டில்மென்ட் பத்திரம், குத்தகை,விடுதலை, பாகப்பிரிவினை, பவர் ஆப் அட்டர்னி உள்ளிட்ட அனைத்து பத்திரப்பதிவுகளிலும் இந்த புதிய மாற்றம் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

இந்த புதிய மாற்றங்கள் இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வருவதாக முத்துச்சாமிதெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X