தேமுதிகவின் 1 கோடி இலக்கு
சென்னை:
நடிகர் விஜயகாந்த்தின் தேமுதிக கட்சிக்கு 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ராமு வசந்தன் கூறியுள்ளார்.
தேமுதிக உறுப்பினர் தற்போதுதான் முறையாக அச்சடிக்கப்பட்டுள்ளது. இதைகட்சியின் பொதுச் செயலாளர் ராமுவசந்தன் சென்னையில் வெளியிட்டார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உறுப்பினர் சேர்க்கையைதீவிரப்படுத்த விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். அதன் படி தீவிர உறுப்பினர் சேர்க்கைதொடங்கப்படடுள்ளது.
ஒரு சட்டசபைத் தொகுதிக்கு 50,000 பேரை உறுப்பினராக சேர்க்கஉத்தேசித்துள்ளோம். சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு கட்சி குறித்த எதிர்பாரப்புஅதிகம் இருந்தது.
தேர்தலில் 28 லட்சம் வாக்குகளைப் பெற்று அசைக்க முடியாத சக்தியாக தேமுதிகஉருவாகியுள்ளதால் ஏராளமான பேர் கட்சியில் சேர ஆர்வமாக வருகின்றனர்.
தேர்தலுக்குப் பின்னர் 1 லட்சம் பேர் புதிதாக கட்சியில் சேர்ந்துள்ளனர்.
மாணவர் அணி, இளைஞர் அணி உள்ளிட்ட 13 அணிகளுக்கான நிர்வாகிகளைவிரைவில் விஜயகாந்த் அறிவிப்பார்.
உள்ளாட்சித் தேர்தல் உத்திகள் குறித்து தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர்தான்முடிவெடுக்கப்படும். அதை விஜயகாந்த் முறைப்படி அறிவிப்பார் என்றார் வசந்தன்.