அதிமுகவின் வெற்றிக்கு மதிமுகவே காரணம்-வைகோ
சென்னை:
விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு என்றுமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை அருகே புழலில் நடந்த மதிமுக பிரமுகர் ராஜனின் புதிய வீடு திறப்புவிழாவில் கலந்து கொண்ட வைகோ பேசுகையில்,தமிழர்களின் அருசுவை உணவு ஆறு வகைப்படும். அதுபோல மதிமுகவுக்கும் ஆறுஎம்.எல்.ஏக்கள் உள்ளனர். எனது தொணடர்கள் எந்தவித எதிர்பார்ப்பும்இல்லாதவர்கள். தமிழர்கள் இருக்கும் இடம் எல்லாம் மதிமுகவும் இருக்கும்.
அமைச்சர் பதவிகளை நம்பி, எம்.பி., எம்.எல்.ஏக்களை கணக்கு பார்ப்பவர்கள் அல்லநாங்கள். சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு மதிமுகதொண்டர்களே முக்கியக் காரணம்.
இப்போது திமுக ஆட்சியில் இருக்கலாம். ஆனாலும் அது சிறுபான்மை அரசுதான்.ஆனால் எதிரே பலமான எதிர்க்கட்சியாக அதிமுக உட்கார்ந்திருக்கிறது.
ஈழப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனி தமிழ் ஈழம்தான். இந்த எண்ணத்தை நான் எந்தபாதிப்பு வந்தாலும் மாற்றிக் கொள்ள மாட்டேன். ஈழத்திற்கு முன்பு நான் சென்றுவந்தபோது, மரணத்தை மிக அருகில் சந்தித்தேன்.
என்னைக் காப்பாற்ற என்னுடன் வந்த சிலர் உயிரிழந்தனர். அன்று நான்இறந்திருந்தால் கூட ஈழத் தமிழர்களுக்கான எனது அர்ப்பணிப்பாக ஏற்றுக்கொண்டிருப்பேன்.
ஈழத் தமிழர்களுக்காக என்றென்றும் குரல் கொடுப்பேன். விடுதலைப் புலிகளின்போராட்டத்திற்கும், அவர்களுக்கும் எனது ஆதரவு என்றென்றும் உண்டு என்றார்வைகோ.












Click it and Unblock the Notifications