தமிழகம் முழுவதும் உஷார் நிலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மும்பை குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்கள், முக்கிய ரயில்கள், வழிபாட்டுத் தலங்கள்,முக்கிய கட்டடங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இரவு நேர வாகனச் சோதனையும் தீவிரமாக நடந்தது.

மும்பை குண்டிவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக டிஜிபி முகர்ஜியைவரவழைத்து முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார். இந்தஆலோசனையின்போது தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படியும்,கண்காணிப்பை அதிகரிக்கும்படியும் அவர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து நேற்று இரவு 8 மணி முதல் வாகனச் சோதனைதீவிரப்படுத்தப்பட்டது. பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திறகுள் வரும்வாகனங்களை தீவிரமாக சோதனையிட உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கியநெடுஞ்சாலைகளில் போலீஸார் விடிய விடிய ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். முக்கியபாலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்துரயில்களிலும் போலீஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனை நடத்தினர்.ரயில்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் முழுவதும்போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பைமேற்கொண்டுள்ளனர். முக்கிய இடங்களில் ரகசிய கேமராக்கள் மூலம் போலீஸார்கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை எழும்பூர், சென்டிரல், தாம்பரம் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் மிகபலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகளை சோதனை செய்த பின்னரே ரயில்நிலையத்திற்குள் போலீஸார் அனுமதிக்கின்றனர்.

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலும், சென்னை சென்டிரல்நிலையத்திலிருந்து இயக்கப்படும் மின்சார ரயில்களிலும் போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பெண்கள் பெட்டிகளில் மகளிர் போலீஸார்பயணிகளுடன் கூடவே பயணம் செய்கின்றனர்.

மதுரை, ஸ்ரீரங்கம் கோவில்களில் பலத்த பாதுகாப்பு:

மும்பை குண்டு வெடிப்பை தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத சுவாமி திருக்கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் திருவானிகோவில் அகிலாண்ட ஈஸ்வரி கோவிலிலும், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலிலும், திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலிலும்பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்க படுகிறார்கள். உலகிலேயே மிகப் பெரிய கோபுரமான ஸ்ரீரங்கநாத சுவாமி ராஜகோபுரத்தின் முன்பும், திருச்சி ரயில் நிலைத்திலும், திருச்சி விமான நிலைத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதே போல மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திலும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+