லாரி குடவுனில் வெடித்த வெங்காய வெடிகள்!
சென்னை:
லாரியில் பருப்பு மூட்டைகளுக்கு இடையே திருட்டுத்தனமாக கடத்தி வரப்பட்டவெங்காய வெடிகள் வெடித்ததால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கொத்தவால்சாவடியில் உள்ள கோடீஸ்வரராவ் என்பவருக்குச் சொந்தமானலாரி குடவுனுக்கு ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து பருப்பு மூட்டைகள் ஏற்றிவரப்பட்டன.நள்ளிரவு 12 மணி அளவில் லாரி குடவுனுக்கு வந்தது. லாரியிலிருந்து பருப்புமூட்டைகளை இறக்கினர். அப்போது ஒரு மூட்டை தவறி விழுந்தது.
இதையடுத்து அந்த மூட்டை பலத்த சப்தத்துடன் சரமாரியாக வெடித்தது. இதனால்அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது.
போலீஸ் படை விரைந்து வந்து லாரியை ஆய்வு செய்தனர். வெடித்த மூட்டையைபரிசோதித்தபோது அதில் வெங்காய வெடிகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்துலாரியில் இருந்த மற்ற மூட்டைகளை பரிசோதித்தபோது பருப்பு மூட்டைகளுக்குக்கீழே மூட்டை மூட்டையாக வெங்காய வெடிகள் இருந்தன.
மொத்தம் 86 மூட்டை வெங்காய வெடிகள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ. 5 லட்சம்ஆகும். லாரி நிறைய வெங்காய வெடிகள் இருந்ததால் போலீஸார் அதிர்ச்சிஅடைந்தனர்.
அனைத்து மூடைகலையும் தீவுத் திடலுக்குக் கொண்டு சென்றனர். அத்தனைமூட்டைகளையும் பத்திரமாக கீழே இறக்கி தண்ணீர் ஊற்றி அவற்றை செயலிழக்கவைத்தனர்.
இந்த வெங்காய வெடிகளை தரையில் போட்டோலோ அல்லது சுவற்றில்எரிந்தாலோதான் வெடிக்கும். பெரும்பாலும் ரவுடிகளும், சமூக விரோதிகளும்தான்இந்த வகை வெங்காய வெடிகளை பயன்படுத்தி வருகிறார்கள்.
போலீஸார் பிடிக்க வந்தால் தப்புவதற்காகவும், எங்காவது கலவரத்தை ஏற்படுத்தவேண்டும் என்றாலோ இவற்றை பயன்படுத்துவர்.
பருப்பு மூட்டைகளுடன் சேர்த்து இந்த வெங்காய வெடிகள் குண்டூரிலிருந்துகள்ளத்தனமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடவ்ன் உரிமையாளர்கோடீஸ்வரராவ்தான் இதை அனுப்பி வைத்துள்ளார்.
வெங்காய வெடிகளை கடத்தி வந்தது தொடர்பாக லாரி நிறுவன மேலாளர்ராமச்சந்திரன், டிரைவர் ரவி, கிளீனர் ராமு ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications