நாளை தேமுதிகவில் இணைகிறார் கு.ப.கி.
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
முன்னாள் அதிமுக அமைச்சர் கு.ப.கிருஷ்ணனின் தமிழர் பூமி கட்சி, நாளைவிஜயகாந்த்தின் தேமுதிகவில் இணைகிறது.
ஜெயலலிதா தலைமையிலான முதல் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்கு.ப.கிருஷ்ணன். அதிமுக ஆட்சியை இழந்த பின்னர் கு.ப.கிருஷ்ணன், தமிழர் பூமிஎன்ற கட்சியை ஆரம்பித்து நடத்தி வந்தார்.இந் நிலையில் தனது கட்சியை தேதிகவில் இணைக்க முடிவு செய்த கு.ப.கி.இதுதொடர்பாக விஜயகாந்த்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து நாளை பிற்பகல் 2 மணிக்கு திருச்சியில் தேமுதிக-தமிழர் பூமிஇணைப்பு விழா நடைபெறுகிறது.
தர்மபுரி படப்பிடிப்புக்காக தற்போது திருச்சியில்தான் விஜயகாந்த் முகாமிட்டுள்ளார்.முதல் கடடமாக விஜயகாந்த் முன்னிலையில் அவரது கட்சியுடன் தனது கட்சியைஇணைக்கும் கு.ப.கி. அதன் பின்னர் திருச்சி, சென்னை அல்லது மதுரையில் விழாநடத்தி அதிகாரப்பூர்வமாக தனது கட்சி இணைப்பை நடத்தவுள்ளார்.












Click it and Unblock the Notifications