For Daily Alerts
Just In
சஸ்பெண்ட் ஆன ஐஜிக்கு மீண்டும் பணி!
சென்னை:
காவலர் தேர்வு வினாத்தாள் இரண்டு முறை லீக் ஆன வழக்கில் தற்காலிக பணிநீக்கம்செய்யப்பட்டிருந்த ஐ.ஜி. ராதாகிருஷ்ணனின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுமீண்டும் அவர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் இரண்டு றை காவலர் தேர்வு வினாத் தாள்கள்வெளியாகின. இதையடுத்து நிடந்த சிபிசிஐடி விசாரணையில் ஐ.ஜி.ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவில் அவர் தற்காலிகபணிநீக்கம் செய்யப்பட்டார்.இந் நிலையில் ராதாகிருஷ்ணனின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.அவர் மீண்டும் பணியில் சேர உத்தரவிடப்பட்டுளளார். திருச்சியில் உள்ளஊர்க்காவல் படைக்கு அவர் ஐ.ஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
இதேபோல ஈரோட்டில் உள்ள சிறப்புஅதிரடிப்படை எஸ்.பியாக வரதராஜுமாற்றப்பட்டுள்ளார். இவர் இதுவரை சென்னை உளவுப் பிரிவு எஸ்.பியாக இருந்துவந்தார். இவர் அதிமுவுக்கு நெருக்கமானவர் என்பதால் தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்.
Comments
Story first published: Wednesday, July 12, 2006, 5:30 [IST]