மும்பை ரயில் குண்டுவெடிப்புகள்: பலி 190 ஆனது

Subscribe to Oneindia Tamil

மும்பை:

மும்பையில் நேற்று மாலை 8 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில் பலியானவர்கள்எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளது. 714 பேர் காயமடைந்துள்ளனர்.

Mumbai Bomb Blast
கார், மாகிம், பாந்த்ரா, பையாந்தர், ஜோகேஸ்வரி, போரிவெலி, மீரா ரோட், மாதுங்காஆகிய பகுதிகளில் இந்த குண்டுவெடிப்புகள் நடந்தன. மாலை நேரத்தில்அலுவலகங்கள், பள்ளிகள் முடிந்து மக்களும் குழந்தைகளும் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது ஓடும் ரயில்களில் குண்டுகள் வெடித்தன.

இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும்நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மும்பையின்பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதல் குண்டு கார் ரயில் நிலையம் அருகே ரயிலில் வெடித்தது. இதைத் தொடர்ந்துஅடுத்தடுத்து ரயில்களில் குண்டுகள் வெடித்தன.

Mumbai Bomb Blast
மாதுங்கா ரயில் நிலையத்தில் வெடித்த குண்டுதான் மிகவும் சக்தி வாய்ந்ததாககூறப்படுகிறது. இங்குதான் அதிக உயிர்ச் சேதம் ஏற்பட்டது.

ஓடிக் கொண்டிருந்த ரயில்களில் குண்டு வெடித்ததில் பெட்டிகள் உடைந்து சிதறின.இதில் பல பயணிகள் தூக்கி வெளியில் வீசப்பட்டு தண்டவாளங்களில் விழுந்துபலியாகியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+