மும்பை ரயில் குண்டுவெடிப்புகள்: பலி 190 ஆனது
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மும்பையில் நேற்று மாலை 8 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில் பலியானவர்கள்எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளது. 714 பேர் காயமடைந்துள்ளனர்.
![]() |
இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும்நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மும்பையின்பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதல் குண்டு கார் ரயில் நிலையம் அருகே ரயிலில் வெடித்தது. இதைத் தொடர்ந்துஅடுத்தடுத்து ரயில்களில் குண்டுகள் வெடித்தன.
![]() |
ஓடிக் கொண்டிருந்த ரயில்களில் குண்டு வெடித்ததில் பெட்டிகள் உடைந்து சிதறின.இதில் பல பயணிகள் தூக்கி வெளியில் வீசப்பட்டு தண்டவாளங்களில் விழுந்துபலியாகியுள்ளனர்.














Click it and Unblock the Notifications