நியூயார்க்கை கலக்கிய வெடிகுண்டு பீதி!
நியூயார்க்:
மும்பையில் நடந்தது போன்ற ரயில் குண்டுவெடிப்புச் சம்பவம் நியூயார்க் நகரிலும்நடக்கும் என்று பரவிய தகவலால் நியூயார்க் மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது.
மும்பையில் நேற்று மாலை புறநகர் ரயில்களில் குண்டுகள் வெடித்த நிலையில்,நியூயார்க் நகரில் ஒரு தகவல் பரவியது.
அங்குள்ள சுரங்க ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் தீவிரவாதிகள்வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப் போவதாக தகவல் பரவ நியூயார்க் பீதியில்ஆழ்ந்தது.
![]() |
இதற்கிடையே மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 2 அமெரிக்கர்கள்பலியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மும்பையில் நடந்த இந்த கொடூர சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் புஷ், ரஷ்ய அதிபர்புடின், இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கடும்கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் கூறுகையில், இது மிகவும்கோழைத்தனமான செயல். தீவிரவாதத்தைக் களையவும், நிவாரணப் பணிகளைமேற்கொள்ளவும், விசாரணை ரீதியிலும் இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா தயாராகஇருக்கிறது.
குண்டுவெடிப்பில் பலியான குடும்பத்தினருக்கு அமெரிக்க மக்கள் சார்பில்அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக என்றார்.
இதற்கிடையே குண்டுவெடிப்பில் தடயவியல் சோதனைகளில் போலீசாருக்கு உதவஎப்.பி.ஐ குழு ஒன்றை அமெரிக்கா இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
இன்டலிஜென்ஸ் பீரோவுடன் இணைந்து மும்பை போலீசாருடன் இந்த எப்பிஐ குழுதடயவியல் சோதனை நடத்தவுள்ளது.
இந் நிலையில் குண்டுவெடிப்புகளுக்கு யார் காரணம் என்பது தொடர்பாக சிலதுப்புகள் கிடைத்துள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.













Click it and Unblock the Notifications