சென்னையில் வெடிகுண்டு புரளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவந்த தகவலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸார்தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள்,பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், முக்கிய கட்டடங்களில் வெடிகுண்டுநிபுணர்கள் சோதனையும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கோட்டை ரயில் நிலைய அதிகாரிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்றுவந்தது. அதில் பேசிய நபர், ரயில் நிலையம் அருகே குண்டு வைக்கப்பட்டிருப்பதாகதெரிவித்தான்.

இதையடுத்து பீதியடைந்த ரயில் நிலைய அதிகாரி காவல் நிலையத்திற்குத் தகவல்கொடுத்தார். பயணிகளிடையேயும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தீவிர சோதனைநடத்தியதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

அது வெறும் புரளி எனத் தெரிய வந்தது. அந்த மர்ம நபரைப் பிடிக்க போலீஸார்முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

வெடிகுண்டு புரளி காரணமாக ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+