சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு-கருணாநிதி கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தேவையானநடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
அர்ஜூன் சிங்குக்கு கருணாநிதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், டெல்லியில்நடந்த 2 நாள் தேசிய சிறுபான்மையினர் கல்வி கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில்கலந்து கொண்டு தாங்கள் பேசுகையில், முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு பெற அனைத்துஉரிமையும் உண்டு என்று கூறியுள்ளீர்கள். அதை நான் உளமாற வரவேற்கிறேன்.சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக ஏற்கனவேகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் நான் விவாதித்துள்ளேன். தற்போது இந்தவிஷயம் தொடர்பான உங்களது கருத்து பாராட்டுக்குரியது.
இத்தோடு நிற்காமல் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இட ஒதுக்கீடுவழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.இதுதொடர்பாக நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரும் இரு சிறுபான்மைசமூகத்திற்கும் அது மகிழ்ச்சி தரக் கூடியதாக அமையும் என்று கூறியுள்ளார்கருணாநிதி.












Click it and Unblock the Notifications